90’ஸ் கிட்ஸ்களின் கனவு நாயகனாக இருந்து வந்த நடிகர் அபாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கனவு நாயகன்

தமிழில் காதல் தேசம் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் நடிகர் அபாஸ். அதன்பிறகு விஐபி, பூச்சூடவா, இனி எல்லாம் சுகமே, படையப்பா, சுயம்வரம், மலபார் போலீஸ், கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். ஹீரோவாக மட்டுமில்லாமல் செகண்ட் ஹீரோவாகவும், துணை கதாபாத்திரத்திலும் நடித்து வந்த நடிகர் அபாஸ், 90களில் ரசிகர்களின் கனவு நாயகனாக இருந்து வந்தார். 2015 ஆம் ஆண்டு நடிப்புக்கு குட்பாய் சொல்லிவிட்டு வெளிநாட்டில் செட்டிலான அபாஸ் சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

மருத்துவமனையில் அனுமதி

நியூசிலாந்தில் செட்டில்லான இவருக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. அதனால் அறுவை சிகிச்சை செய்துகொண்ட அவர், தனது உடல்நிலை குறித்த தகவலை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இவரது வீடியோ, மற்றும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக்கில் இருக்கின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருக்கு பிறந்தநாள் கொண்டாட்டப்பட்ட நிலையில், அவர் தனக்கு வாழ்த்து தெரிவித்த பலருக்கும் நன்றியை தெரிவித்தார். ஒரு காலத்தில் சினிமாவில் கொடி கட்டு பறந்த நடிகர் தற்போது சினிமா விட்டு விலகி என்ன செய்கிறார் என்றே தெரியாத அளவிற்கு வெளிநாட்டில் செட்டில் ஆகிவிட்டார். இவரது நடிப்பில் வெளியான பல படங்கள் சூப்பர்ஹிட் ஆகியும், இவர் சினிமாவை விட்டு விலகியது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார். அது மட்டும் இல்லாமல் அவரை மீண்டும் நடிக்க வருமாறு கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here