நடிகை மாளவிகா மோகனன் “தங்கலான்” பட அனுபவத்தை ரசிகர்களிடம் பகிர்ந்துள்ளார்.

மிகுந்த எதிர்பார்ப்பு

நடிகர் விக்ரம் தற்போது பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகி வரும் தங்கலான் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த திரைப்படத்திற்கு, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். சமீப காலமாக நடிகை மாளவிகா மோகன் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை பெற்றதால் இப்படத்தில் வெற்றிக்காக அவர் காத்துக் கொண்டிருக்கிறார்.

விக்ரம் உதவி செய்தார்

இந்நிலையில், சமீபத்தில் டுவிட்டரில் ரசிகர்களுடன் உரையாடிய நடிகை மாளவிகா மோகனனிடம் “தங்கலான்” படத்தை பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்துள்ள மாளவிகா; “தங்கலான் அழகான படமாக உருவாகி வருகிறது. தனித்துவமான உலகை உருவாக்குகிறோம். இதன் கிளைமாக்ஸ் காட்சி படப்பிடிப்பு இம்மாத இறுதியில் நடக்க இருக்கிறது. நடிகர் விக்ரமுக்கு ஏற்பட்ட காயத்தால் தற்சமயம் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் குணமடைந்த பிறகு படப்பிடிப்பு மீண்டும் தொடங்கும். இப்படம் எனக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு ஷாட்டிலும் விக்ரம் தான் எனக்கு உதவியாக இருந்தார். தன்னை சுற்றி இருக்கும் அனைவரையும் அவர் கவனித்துக்கொள்கிறார். அவருடைய நகைச்சுவை உணர்வு வேற லெவல்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here