கேன்ஸ் திரைப்பட விழாவில் பட்டு புடவையில் அசத்தியுள்ளார் நடிகை குஷ்பு.

சிவப்பு கம்பள வரவேற்பு

பிரான்ஸ் கேன்ஸ் நகரில் ஆண்டுதோறும் நடத்தப்படும் புகழ்பெற்ற திரைப்பட விழாவான கேன்ஸ் திரைப்பட விழா மே 17ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த விழாவில் பல முன்னணி நடிகர், நடிகைகளும் பங்கேற்று சிவப்பு கம்பளத்தை அலங்கரிப்பார்கள். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், நடிகர் மாதவன், நடிகைகள் நயன்தாரா, பூஜா ஹெக்டே, தமன்னா, வாணி திரிபாதி, கிராமப்புற இசையமைப்பாளர் மற்றும் பாடகர் மாமே கான், இசையமைப்பாளர் ரிக்கி கேஜ், திரைப்பட தயாரிப்பாளர் சேகர் கபூர், திரைப்பட தணிக்கை வாரியத் தலைவர் பிரசூன் ஜோஷி உள்ளிட்டோர் பங்கேற்றுள்னர். விழாவில் மாதவனின் ‘ராக்கெட்ரி: தி நம்பி எபெக்ட்’ படம், இந்தியா சார்பில் திரையிடப்படுகிறது.

அசத்திய குஷ்பு

உலகெங்கிலும் உள்ள திரையுலக பிரபலங்கள் இந்த விழாவில் பங்கேற்பார்கள். இந்நிலையில் நேற்று நடிகை ஐஸ்வர்யா ராய் வித்யாசமான உடையில் தோன்றி அனானிவரியும் வியப்பில் ஆழ்த்தினார். வருடம் தவறாமல் இந்த விழாவில் பங்கேற்கும் ஐஸ்வர்யா ராய், எப்போதும் புது புது வித்யாசமான மாடர்ன் உடைகளில் வந்து அசத்துவார். அந்த வகையில் நேற்றும் அரங்கமே வியக்கும் அளவிற்கு வந்து இறங்கினார். தற்போது நடிகை குஷ்பு விழாவில் பங்கேற்ற புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றது. இதில் நடிகை குஷ்பு, கையால் நெய்யப்பட்ட காஞ்சிபுரம் பட்டு புடவையை உடுத்தி தங்க மங்கையாக நடந்து வந்து அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளார். இந்த புகைப்படத்தை சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள குஷ்பு, “நம் நாட்டின் பாரம்பரியத்தை எங்கே சென்றாலும் காப்பாற்றுவேன்” என்றும் கூறியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது குஷ்பு ரசிகர்களால் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here