நடிகர் விஜய்யின் 68வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க போவதாக தகவல் வெளியாகி உள்ளன.

விறுவிறுப்பான ஷூட்டிங்

நடிகர் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் “லியோ” படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் முடிந்தது. இதை தொடர்ந்து சென்னையில் தற்போது படப்பிடிப்பு நடந்து வருகின்றது. அதற்குப் பிறகு ஹைதராபாத் விமான நிலையம் மற்றும் ரமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடைபெற உள்ளது.

வெங்கட் பிரபு விஜய் காம்போ

லியோ படத்தின் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளதால் விஜய் அடுத்து யாருடன்இயக்கத்தில் இணையப் போகிறார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்து வந்தது. இந்நிலையில் ஆரம்பத்தில் லியோ படத்திற்கு பிறகு தெலுங்கு இயக்குநருடன் இணைய போவதாக தகவல் வெளியானது. ஆனால் தற்போது விஜய்யின் 68வது படத்தை இயக்குநர் வெங்கட் பிரபு இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது “தளபதி 68” என்று தற்காலிகமாக அழைக்கப்படும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. ஏற்கனவே சென்னை 28, மங்காத்தா, மாநாடு உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் ஹிட் கொடுத்துள்ள வெங்கட் பிரபு, விஜய்யை வைத்து தரமான சம்பவம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இப்படத்தைப் பற்றி கூடுதல் விவரம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here