விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் 1200 எபிசோடுகளை கடந்ததை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர்.

பிரியும் குடும்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், சில நாட்களுக்குப் முன்பு அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டு கண்ணனும், ஜீவாவும் வீட்டை விட்டு பிரிகின்றனர். இதனையடுத்து ஜீவா தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். கண்ணன் தனிக்குடித்தனம் செல்ல, ஜீவா தன் மாமனார் வீட்டில் தங்கி மாமனாரின் பிசினஸை பார்த்து வருகிறார்.

கொண்டாட்டம்

விறுவிறுப்பாக நகரும் இந்த சீரியல் 1200 எபிசோடுகளை கடந்துள்ளது. இந்த மாபெரும் சாதனையை சீரியல் குழுவினர் கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். இந்த புகைப்படங்கள் சோசியல் மீடியாக்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த வெற்றியை பற்றி இயக்குநர் சிவசேகர் கூறும்பொழுது; “பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புதிய மயில் கல்லை எட்டியதை எண்ணி நான் மகிழ்ச்சி அடைகிறேன். அந்த தொடரின் முழுமையான பயணம் என் கெரியருக்கு உயிர் கொடுத்தது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here