ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான சீதா ராமன் தொடரின் இன்றைய எபிசோடில் நடக்க இருப்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நம்பிக்கை கொடுக்கும் சீதா

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சீதா ராமன் சீரியல், பல திருப்பங்களுடன் பரபரப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. நேற்றைய எபிசோடில் ராம் சீதாவிடம் தனது ஐஏஎஸ் கனவு பற்றி சொன்ன நிலையில், கண்டிப்பாக உங்களுடைய ஆசை நிறைவேறும், உங்களுக்கு நான் உதவியாக இருப்பேன் என்று நம்பிக்கை கொடுக்கும் விதமாக பேசுகிறார். இதனால் சந்தோஷம் அடைகிறார் ராம். அதன்பிறகு உங்களுக்கு வேற என்ன எல்லாம் தெரியும் என்று சீதா கேட்கிறார். ராம், நான் நல்லா பாடுவேன் என சொல்கிறார். அப்போ ஒரு பாட்டு பாடுங்க என்று சீதா கேட்க, உடனே கிடார் வாசித்துக் கொண்டே ராம் பாடுகிறார். இதனை சீதா கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். அதன்பிறகு நாளைக்கு உங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருக்கு என்று சொல்கிறார் சீதா.

கண்கலங்கும் ராம்

மறுநாள் காலையில் சீதா ராமை அவரது அம்மாவின் கல்லறைக்கு அழைத்துச் சென்று சுத்தம் செய்து பிரார்த்தனை செய்ய சொல்கிறார். அதன்பிறகு நீங்க உங்கள் கனவை பத்தி வேண்டிக்கோங்க உங்க அம்மா என்னைக்கும் உங்களது நல்லது தான் செய்வாங்க என்று சீதா சொல்கிறார். அதேபோல் ராம் வேண்டிக் கொண்டு அம்மாவின் கல்லறை முன் கண்கலங்கி நிற்கிறார். ராம், நீ என்ன வேண்டிகிட்ட என்று சீதாவிடம் கேட்க, எல்லோரும் நல்லா இருக்கணும், உங்க கூட சந்தோஷமா வாழனும் என்று வேண்டிக் கொண்டதாக சொல்கிறார். இதனால் எமோஷனல் ஆகிறார் ராம்.

நக்கல் செய்த மகா

வீட்டிற்கு வந்தவுடன் வேலை செய்யும் பெண்ணுக்கு உடல்நிலை சரியில்லை என்பதை தெரிந்த சீதா, என்ன ஆச்சு என்று கேட்டு நானே சமையல் செய்கிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு வீட்டில் இருப்பவர்கள் உன் சமையலை சாப்பிடுவதற்கு பதிலாக சாவதே மேல் என்று சொல்கின்றனர். அதன்பிறகு நீ ஒன்னும் செய்ய வேண்டாம் நாங்க எனக்கு ஆர்டர் செய்து கொள்கிறோம் என்று மகா நக்கலாக சொல்கிறார். அதன்பிறகு சீதா சமையலை முடித்து அவரும் மீராவும் சாப்பிட தொடங்கி விடுகின்றனர். ஆனால் ஆர்டர் செய்த உணவு வராமல் மகா காத்துக்கொண்டிருக்கின்றார். இப்படி மிகவும் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் சீதா ராமன் தொடருக்கு, ரசிகர்கள் நல்ல வரவேற்பை அளித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here