விஜய் தனது கையில் வந்ததால் தான் கமர்ஷியல் ஹீரோவாக மாறியுள்ளார் என இயக்குநரும், அவரது தந்தையுமான எஸ்.ஏ. சந்திரசேகர் கூறியுள்ளார்.

டிரெய்லர் வெளியீடு

இயக்குநர் தங்கர்பச்சான் இயக்கத்தில் உருவான ‘கருமேகங்கள் கலைகின்றன’ திரைப்படத்தின் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், இயக்குநர் தங்கர்பச்சான், கவிஞர் வைரமுத்து, இயக்குநர்கள் எஸ்.ஏ.சந்திரசேகர், கௌதம் வாசுதேவ் மேனன், லோகேஷ் கணகராஜ், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ், நடிகர் யோகிபாபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

வாய்ப்பு கொடுக்கல

விழாவில் இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் பேசுகையில்; “நான் இயக்குநராக மாறி பல படங்கள் எடுத்தேன். அப்போது விஜய்யை படம் நடிக்க வைக்க நினைத்தேன். அதற்காக பெரிய இயக்குநர்களிடம் விஜய்யின் ஆல்பத்துடன் சென்றேன். விஜய்யை நடிக்க வைக்க, முதலில் இயக்குநர் பாரதிராஜாவிடம் தான் சென்று கேட்டேன். அவர் அப்போது வாய்ப்பு கொடுக்கவில்லை. அதேபோன்று இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனனிடம் விஜய்யை வைத்து நடிக்க வைக்க வேண்டும் என்று கேட்டேன். அவரும் அப்போது விஜய்யை வைத்து படம் எடுக்கவில்லை. நல்ல இயக்குநர்கள் யாரும் விஜய்யை வைத்து படம் எடுக்க முன்வரவில்லை. ஒருவேளை அதுவும் நல்லதுக்குதான். ஏன் என்றால் விஜய் என் கையில் வந்ததால் தான் கமர்ஷியல் ஹீரோவாக மாறியுள்ளார். அதனால் தான் கடவுள் அப்படி செய்து இருப்பார்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here