பல வருடங்கள் கழித்து விஜய் தன் வீட்டுக்கு வந்தாக அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் கூறியுள்ளார்.

லியோ படத்தில் பிஸி

தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா நடிக்கிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்றுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு புகைப்படங்களும், வீடியோக்களும் அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

அம்மாவுடன் விஜய்

சமீபத்தில் விஜயின் பெற்றோர்கள் 50வது திருமண நாளை கொண்டாடினார்கள். அப்போது நடிகர் விஜய் தனது அம்மா சோபாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரல் ஆனது. ஏற்கனவே விஜயின் அப்பாவுக்கும், விஜய்க்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அவர்கள் இருவரும் பேசிக்கொள்வதில்லை என்றும் கூறி வந்த நிலையில், இந்த போட்டோ பேசுபவர்களுக்கு வசதியாக அமைந்துவிட்டது.

வீட்டுக்கு சென்ற விஜய்

விஜய் தனது தாயுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் குறித்து அவரது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரிடம் சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டது. இந்த கேள்விக்கு பதில் அளித்த எஸ்.ஏ.சந்திரசேகர்; “தப்பு செய்தால் ஊடகங்கள் கேள்விகள் கேட்கலாம். அதேநேரத்தில் ஏதாவது மகிழ்ச்சிகரமான செய்திகள் நடந்தாலும் அதைப்பற்றி கேட்கலாம். என் மகன் பத்து வருடங்கள் கழித்து எங்கள் வீட்டிற்கு திரும்பி வந்துள்ளான். அதுவே எங்களுக்கு இப்போதைய மகிழ்ச்சிகரமான செய்தி. அதைப்பற்றி எந்த ஊடகமாவது செய்தியை வெளியிட்டதா?.. இல்லை. தாயுடன் இருக்கும் புகைப்படங்கள் வெளியானதை பற்றி கூறுகிறீர்கள். அதைப்போல நிறைய புகைப்படங்கள் இருக்கின்றன. அது ஒவ்வொன்றாக வெளிவரும்’ என கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here