சின்னத்திரை நடிகை ஷாலினி தான் விவாகரத்து செய்ததை போட்டோஷூட் நடத்தி கொண்டாடி உள்ளார்.

பிடிக்காத திருமணம்

ஜீ தமிழில் ஒளிபரப்பான ‘முள்ளும் மலரும்’ என்ற தொடரின் மூலம் ரசிகர்களிடையே பிரபலமானவர் நடிகை ஷாலினி. இவர் ரியாஸ் என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டதையடுத்து, இந்த தம்பதிக்கு ரியா என்ற மகள் உள்ளார். இந்நிலையில் தனது கணவர் ரியாஸ் தன்னை மனதளவிலும், உடலளவிலும் கொடுமைப்படுத்துவதாக குற்றம்சாட்டிருந்தார் நடிகை ஷாலினி. அதுமட்டும் இல்லாமல் விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தார். தற்போது நீதிமன்றம் ஷாலினிக்கு விவாகரத்து வழங்கி உத்தரவிட்டுள்ளது. இதனால் சந்தோஷத்தில் உள்ள ஷாலினி போட்டோஷூட் நடத்தி விவாகரத்தை கொண்டாடியுள்ளார்.

விவாகரத்து கொண்டாட்டம்

திருமண புகைப்படங்களை கிழித்தும், காலால் மதித்தும் கொண்டாடிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. போட்டோஷூட் புகைப்படத்தை வெளியிட்டுள்ள ஷாலினி, “குரலற்றவர்கள் என தங்களை நினைப்பவர்களுக்கு நான் தரும் விவாகரத்து செய்தியாகும். ஒரு மோசமான கல்யாணத்தை விட்டாலும் பரவாயில்லை. ஏனென்றால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க தகுதியானவர். உங்களை ஒருபோதும் குறைத்து மதிப்பிடாதீர்கள். உங்கள் வாழ்க்கையை கட்டுப்படுத்தி, உங்களுக்கும், உங்கள் குழந்தையின் எதிர்காலத்திற்கும் தேவையான மாற்றங்களை செய்ய தயாராகுங்கள். விவாகரத்து தோல்வி அல்ல. உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்தும் ஒரு திருப்புமுனை” என்று பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here