வாழ்க்கையில் எதற்கும் தான் கவலைபட்டது கிடையாது என்று நடிகர் நாக சைதன்யா கூறியுள்ளார்.

கருத்து வேறுபாடு

நாக சைதன்யா தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘கஸ்டடி’ படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் மே 12ஆம் தேதி வெளியாக உள்ளது. நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்துகொண்ட இவர், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தார். புஷ்பா படத்தில் கவர்ச்சியாக நடனம் ஆடுவதற்கு சமந்தா ஒப்புக்கொண்ட பிறகு இவர்களுக்குள் கருத்து வேறுபாடு வந்ததாக கூறப்பட்டது. அந்த கருத்து வேறுபாடே இவர்கள் பெரிய காரணமாகவும் அமைந்துவிட்டது. அதன்பிறகு எந்த ஒரு கிசுகிசுக்களிலும் நாக சைதன்யா சிக்காமல் இருந்தார்.

காதல் கிசுகிசு

சமீப காலமாக நடிகை சோபிதா உடன் கிசுகிசுக்களில் சிக்கி வருகிறார். பொன்னின் செல்வன் படத்தின் மூலம் பிரபலமான சோபிதாவுடன் நாக சைதன்யா ரிலேஷன்ஷிப்பில் இருந்து வருவதாகவும் கூறப்படுகின்றது. அடிக்கடி இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. ஆனால் இதுகுறித்து இருவரும் எந்த ஒரு தகவலையும் உறுதிப்படுத்தவில்லை.

வருத்தம் இல்லை

இந்நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு பேட்டியளித்த நடிகர் நாக சைதன்யா, கூறிய பதில்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. வாழ்க்கையில் எதற்காவது மிகப்பெரிய அளவில் வருத்தம் அடைந்துள்ளீர்களா என கேள்வி கேட்டதற்கு, என் வாழ்க்கையில் எதற்கும் வருத்தப்பட்டது கிடையாது. எல்லாமே கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தான். இருந்தாலும் நீங்கள் கேட்டதற்காக சொல்கிறேன்.காலையில் லேட்டாக எழுந்திருப்பது. சில படத்தில் நடித்த பிறகு இந்த படத்தில் ஏன்டா நடித்தோம் என்று யோசித்து வருத்தப்பட்டதுண்டு” என்று கூலாக பதில் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here