விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரை விட்டு ஜீவா கதாபாத்திரத்தில் நடிக்கும் வெங்கட் விலகப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

பிரியும் குடும்பம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல தொடர்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த தொடரில், சில நாட்களுக்குப் முன்பு அண்ணன் தம்பிகளுக்குள் பிரச்சனை ஏற்பட்டு கண்ணனும், ஜீவாவும் வீட்டை விட்டு பிரிகின்றனர். ஜீவா தனது மாமனார் வீட்டில் வசித்து வருகிறார். சமீபத்தில் முல்லையின் வளைகாப்பு நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்கின்றனர். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு அனைவரும் ஒன்று கூடுவார்கள் என்று தனம் எதிர்பார்ப்பில் இருந்தார். ஆனால் நிகழ்ச்சி முடிந்தவுடன் அவரவர் கிளம்பிச் சென்றுவிட்டனர்.

வீட்டோடு மாப்பிள்ளை

மாமனார் வீட்டில் வசித்து வரும் ஜீவாவின் சுய கௌரவம் பாதிக்கப்படும் என்பதால், மீனாவும், ஜீவாவும் தனியாக செல்ல வேண்டும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஜனார்த்தனன் சொத்து பத்திரத்தை ஜீவாவின் கையில் கொடுத்து “எனக்கு அப்புறம் மொத்த சொத்தையும் நீங்க தான் பாத்துக்கணும்” என்று முழு பொறுப்பையும் அவரிடத்தில் ஒப்படைக்கிறார். என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஜீவா பொறுப்பாக மாமனாரின் வியாபாரத்தை பார்த்துக் கொள்கிறார்.

ஜீவாவாக பாரதி

விறுவிறுப்பாக சென்றுகொண்டு இருக்கும் இந்த தொடரில் இருந்து தற்போது ஜீவா கதாபாத்திரத்தில் நடித்து வரும் வெங்கட் இந்த சீரியலை விட்டு விலகப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மேலும் அவர் நடித்து வந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடர் மூலம் பிரபலமான (பாரதி) என்கின்ற அருண், இந்த கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாக சமூக வலைதளத்தில் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here