பிரபு தேவாவின் இரண்டாவது மனையின் வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

டாப்பில் இருந்த பிரபு தேவா

பிரபுதேவா ‘இந்து’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு காதலன், ராசையா, லவ் பேர்ட்ஸ், மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, வி ஐ பி என்று தொடர்ந்து ஹிட் கொடுத்து வந்த நடிகர் பிரபுதேவா, 90களில் முன்னணி நடிகர்கள் லிஸ்டில் இருந்தார். தெலுங்கு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நடிகர் பிரபுதேவா, 2007 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ‘போக்கிரி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அக்னி நட்சத்திரம் என்ற படத்தின் மூலம் நடன கலைஞராக அறிமுகமானார். ஆனால் முரளி நடித்த இதயம் படத்தில் பிரபலமான ‘ஏப்ரல் மேயில’ பாடலின் மூலம் முன்னணி நடன கலைஞராக அறிமுகமானார்.

மைக்கேல் ஜாக்சன்

ஏழையின் சிரிப்பில், உள்ளம் கொள்ளை போகுதே, பெண்ணின் மனதை தொட்டு, விஐபி, மின்சார கனவு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. நடிகர். நடன கலைஞர், தயாரிப்பாளர், இயக்குநர், பாடலாசிரியர், பாடகர் என்று அனைத்திலும் முன்னிலையில் உள்ளார். தமிழ், ஹிந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம் என்று பல மொழிகளிலும் தனது திறமையை நிரூபித்து வருகிறார். இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று அனைவராலும் புகழப்படுபவர். இன்று வரை இவரது நடன அசைவுகளுக்கும், நடனத்திற்கும் நிகரானவர் சினிமா துறையில் இல்லை என்றும் சொல்லலாம். அந்த அளவிற்கு நடனத்தால் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டவர்.

இரண்டாவது மனைவியின் வீடியோ

1995 ஆம் ஆண்டு ரமலாத் என்பவரை திருமணம் செய்து கொண்டார் பிரபு தேவா. கருத்து வேறுபாடு காரணமாக 2011 ஆம் ஆண்டு அவரை விவாகரத்தும் செய்தார். அதன் பிறகு பிரபுதேவா இரண்டாவதாக ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணம் ஆகி மூன்று ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை பிரபுதேவாவின் இரண்டாவது மனைவி எந்த ஒரு சோசியல் மீடியாவிலும் தலை காட்டாமல் இருந்தார். ஆனால் சமீபத்தில் பிரபுதேவா தன்னுடைய ஐம்பதாவது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில் வீடியோ மூலம் பிரபுதேவாவுக்கு வாழ்த்துக்கள் கூறிய அவரது இரண்டாவது மனைவியின் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. அவர் கூறியிருப்பதாவது,” உங்களை திருமணம் செய்து மூன்று ஆண்டுகள் ஆகிவிட்டது. உங்களுடைய ஒழுக்கம் மற்றும் கடின உழைப்பு என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது. நீங்கள் எப்பொழுதும் என்னை மகிழ்ச்சியாக வைத்துள்ளீர்கள். உங்களை திருமணம் செய்ததை நான் அதிர்ஷ்டமாக கருதுகிறேன். இதற்காக நான் கடவுளுக்கு கடமை பட்டிருக்கிறேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here