நடிகர் விஜய் தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பகிரப்பட்டு வருகின்றது.

டாப் ஹீரோ

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடியவர் நடிகர் விஜய். தற்போது இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் பிஸியாக இருக்கிறார். நடிகர் விஜய்யின் பெற்றோர் எஸ்.ஏ. சந்திரசேகர் – ஷோபா தம்பதி தங்களது 50வது திருமண நாளை கொண்டாடி வருகின்றனர்.

கருத்து வேறுபாடு

விஜய்க்கும் அவரது தந்தையான எஸ்.ஏ. சந்திரசேகருக்கும் கருத்து வேறுபாடு இருப்பதாகவும், அதனால் இருவரும் பேசிக் கொள்ளவில்லை என்றும் பரவலான கருத்து உள்ளது. ஆனால் அதனை முற்றிலுமாக மறுத்துள்ள விஜயின் அம்மா ஷோபா, இதுகுறித்து தெளிவான விளக்கத்தை அளித்துள்ளார். நடிகர் விஜய்க்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் தன்னுடன் நேரம் கழித்து வருவதாகவும் கூறியிருந்தார் ஷோபா. இந்நிலையில் ஷோபா – எஸ்.ஏ. சந்திரசேகர் தம்பதி தங்களது 50வது திருமண நாளை கொண்டாடி வரும் வேலையில், தனது அம்மாவுடன் எடுக்கப்பட்ட விஜய்யின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here