வேலூர் சென்றிருந்த நடிகர் டி. ராஜேந்தர் பொதுமக்கள் பாதுகாப்பாகவும், ஜாக்கிரதையாகவும் இருக்க வேண்டுமென கேட்டுக் கொண்டார்.

செல்பி எடுத்த மக்கள்

நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் வேலுார் மாவட்ட ஆட்சியர் கலெக்டர் அலுவலகத்திற்கு சென்றார். அங்கு ஆட்சியர் குமாரவேல் பாண்டியனை அவர் சந்தித்து பேசினார். டி.ராஜேந்தரை கண்டதும் ஆட்சியர் அலுவலக ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அவரை சூழ்ந்து கொண்டு, செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

சூப்பர் விழிப்புணர்வு

பின்னர், அங்கிருந்த மக்களிடம் டி. ராஜேந்தர் பேசியதாவது; “எல்லாரும் பாதுகாப்பாக, ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அரசாங்கம் கூறும் சட்டத்தை பின்பற்ற வேண்டும். வாழ்க்கையில எல்லாருக்கும் வேணும் டாஸ்க், உங்களோட சேப்டிக்கு போடுங்க மாஸ்க்” என்று தனக்கே உரிய ஸ்டைலில் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here