பொன்னியின் செல்வன் 2ஆம் பாகம் வரும் வெள்ளிக்கிழமை வெளியாக இருப்பதால் டிக்கெட் விற்பனை அமோகமாக நடந்து வருகின்றது.

வசூல் வேட்டை

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் அதிக எதிர்பார்ப்புடன் வெளிவர இருக்கும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வரும் 28ஆம் தேதி திரைக்கு வர உள்ளது. பொன்னியின் செல்வன் முதல் பாகம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று, ரூ.500 கோடிகளுக்கு மேல் வசூலை அள்ளியது. இதனால் அதைவிட அதிகமான எதிர்பார்ப்பில் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளிவர உள்ளது. கடந்த சில நாட்களாக இப்படக்குழுவினர் படத்தின் ப்ரோமோஷன்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

சூடுபிடிக்கும் டிக்கெட் விற்பனை

ஐந்து மொழிகளில் வெளியாக இருக்கும் பொன்னியின் செல்வன் 2 படத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, சரத்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். அதுமட்டும் இல்லாமல் விக்ரம் மற்றும் ஐஸ்வர்யா ராய் காட்சிகளை காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்தில் உள்ளனர். இப்படத்தின் ரிலீஸ் தேதி நெருங்கிவிட்டதால், டிக்கெட் முன்பதிவு செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகின்றது. படத்தின் மீது எதிர்பார்ப்பில் இருக்கும் ரசிகர்கள் போட்டி போட்டுக் கொண்டு டிக்கெடுகளை வாங்கி முன்பதிவு செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here