வரும் 28 ஆம் தேதி வெளியாக இருக்கும் PS 2 படத்தின் ப்ரோமோஷன் தற்போது மும்பையில் நடந்து வருகின்றது.

தீவிர ப்ரோமோஷன்

மணிரத்தினம் இயக்கத்தில் உருவாகியுள்ள “பொன்னியின் செல்வன் 2” திரைப்படம் 28ஆம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளிவர உள்ளது. ஆரம்பத்தில் இருந்து இப்படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து வந்த நிலையில், இப்பட குழுவினரின் எஸ்க்ளுசிவ் புகைப்படங்கள், புரமோஷன் புகைப்படங்கள் என்று சோசியல் மீடியாக்களை தெறிக்க விட்டு படத்தின் மீது உள்ள எதிர்பார்ப்பை கூட்டி வருகின்றனர்.

டூர் அடிக்கும் படக்குழுவினர்

“பொன்னியின் செல்வன் 2” படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, சரத்குமார், பார்த்திபன், பிரகாஷ்ராஜ், ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலரும் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் முதல் பாகம் ரசிகர்களுடைய மிகப்பெரிய வெற்றியடைந்தது. பொன்னியின் செல்வன் 2 திரைப்படத்தின் வெளியீட்டு தேதி நெருங்கி வருவதால் இப்படக்குழுவினர் தீவிரமாக ப்ரொமோஷனல் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் கோவை, டெல்லி, கொச்சி என்று பல ஊர்களிலும் டூர் அடித்து வந்த படக்குழுவினர் தற்போது மும்பைக்கு சென்றுள்ளனர். ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் சோபித்தா துதிபாலா மூவரும் மும்பையில் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றது. அருண்மொழிவர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவி பூங்குழலியாக நடித்திருக்கும் ஐஸ்வர்யா லட்சுமி மற்றும் வானதியாக நடித்திருக்கும் சோபித்த துதிபாலா எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஜெயம் ரவி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here