தொலைந்து போன தனது ஐ போன் பார்சலில் வந்ததை கண்டு நடிகை ஷாலு ஷம்மு அதிர்ந்து போனார்.

நண்பர்களுடன் பார்ட்டி

வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், மிஸ்டர் லோக்கல் போன்ற படங்களில் நடித்தவர் நடிகை ஷாலு ஷம்மு. இவர் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ரூ.2 லட்சம் மதிப்புள்ள ஐ போன் ஒன்றை வாங்கியுள்ளார். கடந்த 9 ஆம் தேதி இரவு சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள நட்சத்திர விடுதியில் நடந்த விருந்து நிகழ்ச்சியில் நடிகை ஷாலு ஷம்மு நண்பர்களுடன் பங்கேற்றார். பின்னர் நிகழ்ச்சி முடிந்து சூளைமேட்டில் உள்ள தனது நண்பர் வீட்டில் தங்கியுள்ளார். அடுத்த நாள் எழுந்து பார்க்கும் போது செல்போன் காணமல் போனதை அறிந்த ஷாலு ஷம்மு, நட்சத்திர விடுதிக்கு சென்று தேடி இருக்கிறார். ஆனால் அங்கு ஐ போன் கிடைக்காததால், இதுதொடர்பாக பட்டினபாக்கம் காவல் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அந்த புகாரில் காணாமல்போன தனது ஐ போன் தொடர்பாக தனது நண்பர்களை சந்தேகிப்பதாக அவர் கூறியிருந்தார்.

அதிர்ச்சி

இதனிடையே, நடிகை ஷாலு ஷம்மு வீட்டிற்கு டான்சோவில் இருந்து ஒரு பார்சல் வந்துள்ளது. இதனை பிரித்து பார்த்தபோது அதில் காணாமல் போன் ஐ போன் இருந்துள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த ஷாலு ஷம்மு, தனது நண்பர்களில் யாரோதான் தனது ஐ போனை திருடியிருப்பதாக கூறியுள்ளார். இதுதொடர்பாக சமூக அவர் பதிவிட்டுள்ளதாவது; “நான் சந்தேகப்பட்ட நபர் தான் எனது ஐ போனை திருடியுள்ளார். 8 வருட நட்பு வீணாகியுள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here