சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நடிகை சிம்ரன் குறித்து வெளிப்படையாக கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி.

முக்கிய கதாபாத்திரம்

தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் நடித்து வருபவர் சாய் பல்லவி. பிரேமம் படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தமிழில் தனுஷுடன் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி பாடலின் மூலம் ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களின் தன் வசம் வைத்துக்கொண்டவர். சமீபத்தில் தமிழில் இவர் நடித்த கார்கி திரைப்படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க நடிகை சாய் பல்லவி ஒப்பந்தமாகியுள்ளார். சிவகார்த்திகேயன் நடித்து வரும் மாவீரன் திரைப்படம் முடிவடைந்த பிறகு, சிவகார்த்திகேயன் சாய் பல்லவி நடிக்கும் பட ஷூட்டிங் துவங்க உள்ளதாக கூறப்படுகிறது.

சிம்ரன் மாதிரி இருக்கணும்

தனது நடனத்தின் மூலம் பல ரசிகர்களை சேர்த்து வைத்துள்ள சாய்பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்கும் படத்தில் நடனமே இல்லை என்று கூறியுள்ளனர். இதனால் அப்செட்டில் இருக்கும் ரசிகர்களுக்கு வேற எந்த மாதிரியான ட்ரீட் கிடைக்கப் போகிறது என்று ஆர்வத்துடன் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் நடிகை சாய் பல்லவி கொடுத்துள்ள பேட்டியில், தான் கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது, சிம்ரனின் திரைப்படம் ஒன்றை பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும், அப்போது தான் நடிகையானால், சிம்ரனை போலத்தான் இருக்க வேண்டும் என்று நினைத்ததாகவும் தெரிவித்துள்ளார். சாய் பல்லவியின் இந்த பேட்டியை பார்த்த சிம்ரன், நெகிழ்ச்சியுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்து தன்னுடைய டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

டான்சர் சிம்ரன்

90களில் இருந்து இப்போது வரை தமிழில் முக்கிய நடிகையாக இருந்து வருபவர் நடிகை சிம்ரன். நடிப்புக்கு மட்டுமில்லாமல் டான்சுக்கும் பேர் போனவர் சிம்ரன். 90களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தனக்கென ஒரு தனி அங்கீகாரத்தை பெற்றுள்ள இவர், இப்போது தனக்கேற்ற முக்கிய கதாபாத்திரங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் அந்தகன் திரைப்படத்தில் இவர் நடித்துள்ள கதாபாத்திரம் மிகுந்த எதிர்பார்ப்பை கூட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here