கடந்த விஷு பண்டிகையன்று எடுக்கப்பட்ட புகைப்படத்தை தனது இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார் இயக்குனர் விக்னேஷ் சிவன்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பு

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நயன்தாரா ஷாருக்கான்னுக்கு ஜோடியாக “ஜவான்” படத்தில் நடித்து வருகிறார். தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு ஜோடியாக “இறைவன்” படத்தில் நடித்திருக்கிறார். தனி ஒருவன் படம் சூப்பர் ஹிட் ஆனதால் இந்த படமும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. தற்போது அடுத்தடுத்து கதைகளை கேட்டு வரும் நயன்தாரா ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்து வந்த நயன்தாரா தற்போது மீண்டும் நடிப்பில் ஃபுல் ஃபார்மில் இறங்கியுள்ளார்.

லைக்ஸ் அள்ளும் போட்டோ

‘ஜவான்’ பட ஷூட்டிங்கில் முழுமையாக முடிவடைந்த நிலையில், ஒரே ஒரு பாடல் காட்சிகள் மட்டும் படமாக்கப்பட்டு வருகின்றது. அந்த பாடல் காட்சியும் இணையத்தில் கசிந்து சர்ச்சையானது என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்குப் பிறகு அனைத்து பண்டிகைகளையும் கோலாகலமாக கொண்டாடி வரும் விக்கி- நயன் ஜோடி சமீபத்தில் விஷு பண்டிகையையும் கோலாகலமாக கொண்டாடியுள்ளனர். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகின்றது. பட்டு வேட்டி சட்டையில் விக்கியும், கேரள பாரம்பரியமான வெள்ளை நிற ஓணம் புடவையுடன் மல்லிப்பூ வைத்திருக்கும் நயனும் சேர்ந்து எடுத்துக்கொண்ட அழகான புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படங்களுக்கு தற்போது லைக்ஸ்கள் குவிந்து வருகின்றது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here