விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட போவதாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடிக்கும் தீபிகா கூறியுள்ளார்.

பிரிந்த குடும்பம்

விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் தற்போது பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகிக் கொண்டு இருக்கின்றது. நான்கு அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து இந்த சீரியல் நகர்கிறது. தற்போது மூர்த்தியிடம் சண்டை போட்டு கண்ணனும், ஜீவாவும் வீட்டை விட்டு வெளியே சென்று விட்டனர். ஜீவாவும், மீனாவுடன் மாமனார் வீட்டிலேயே செட்டில் ஆகிவிட்டார். கண்ணன் தனி குடித்தனம் வந்துவிட்டார். இந்நிலையில் கண்ணனின் மனைவியான ஐஸ்வர்யா கிரெடிட் கார்டு மூலம் கண்ணனுக்கு அதிகமான செலவு வைக்கிறார். கிரெடிட் கார்ட் மூலம் வீட்டுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் வாங்குவதுடன், புடவை, நகை என்று ஆடம்பரமாக செலவு செய்து வருகிறார். அது மட்டும் இல்லாமல் தற்போது முல்லையின் வளைகாப்புக்கு ஜீவாவும் கண்ணனும் வருவார்களா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில், பரிசுடன் ஜீவா குடும்பத்துடன் வருகிறார். அதேபோல் கண்ணனும் நகையை பரிசாக வாங்கிக்கொண்டு வருகிறார்.

நடிகர் மாற்றம்

இதன் பிறகு என்ன நடக்கப்போகிறது என்று ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். சமீபகாலமாக ஐஸ்வர்யாவின் நடவடிக்கை எரிச்சல் ஊட்டும் வகையில் உள்ளது. இதனால் கண்ணனுக்கு எப்போது வேலை போகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். கண்ணன் செய்யும் வேலையில் ஏதாவது பிரச்சினை வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த நிலையில் தற்போது கண்ணனின் கதாபாத்திரத்திற்கே பிரச்சனை வந்துள்ளது. தமிழும் சரஸ்வதியும் தொடரில் கார்த்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் நவீன் வெற்றியுடன் இருக்கும் புகைப்படத்தை ஒன்றை வெளியிட்டுள்ள தீபிகா மிக விரைவாக சுவாரசியமான ஒரு விருப்பம் வர இருக்கிறது என்று பதிவிட்டுள்ளார். கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வந்த சரவணன் விக்ரம் இந்த தொடரை விட்டு விலகியதால், அந்த கதாபாத்திரத்தை புதிதாக நவீன் வெற்றி இணைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here