பரபரப்பாக நகரும் ரஜினி தொடரில் அடுத்து என்ன நடக்க போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கின்றனர்.

மன்னிப்பு ஏற்க மறுப்பு

ஜீ தமிழில் பரபரப்பாக ஒளிபரப்பாகி வரும் தொடர் ரஜினி. இந்த தொடரில் கடந்த வாரம் மாரிமுத்து ரஜினியை காப்பாற்ற கத்தி குத்து வாங்கிய நிலையில், ரஜினி அவரை மருத்துவமனையில் அனுமதித்து அவரை அப்பா என கூப்பிட்டு அவரை சந்தோஷத்தில் ஆழ்த்தினார். இந்த காட்சிக்குப் பிறகு இத்தொடரில் என்ன விறுவிறுப்பாக நடக்கப் போகிறது என்று ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆவல் நிலவி வந்த நிலையில் இது குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது மாரிமுத்து ரஜினியிடம் அனைவரின் முன் மன்னிப்பு கேட்க, ரஜினி அதனை ஏற்க மறுக்கிறாள். இதனால் குடும்பத்தில் உள்ள அனைவரும் ரஜினியை சரமாரியாக கேள்வி கேட்கின்றனர்.

நிலவும் குழப்பம்

அதன் பிறகு தான் ரஜினி மாரிமுத்துவிடம் சத்தியம் வாங்கியது பிளாஷ்பக்கில் தெரிய வருகிறது. இதனை தொடர்ந்து ரஜினி பார்த்திபனுக்காக, குபேரன், அரவிந்த் இருவரும் ஃபேர்வெல் தயார் செய்கிறார்கள். ரஜினியை பற்றி தவறாக பேச வேண்டும் என நினைத்த குடும்பத்தினர்கள் அனைவரும் ரஜினியை பற்றி புகழ்ந்து பேசுகிறார்கள். அதன் பிறகு ரஜினி மற்றும் பார்த்திபனை அனிதா கோவிலுக்கு வரவழைத்து பார்த்திபனின் அப்பா என்னென்ன வேண்டுதல் செய்ய வேண்டும் என்று நினைத்து இருந்தாரோ அந்த வேண்டுதலை ரஜினி மற்றும் பார்த்திபன் இருவரும் ஜோடியாக நிறைவேற்றுகிறார்கள். அடுத்த கட்டமாக பார்த்திபன் ஃபாரின் போக வேண்டுமா? இல்லையா? என அம்மன் சன்னதியில் ரஞ்சிதம் பூ போட்டு பார்க்கலாம் என சொல்லி பூ போட்டு பார்க்கின்றனர். இப்படி அடுத்தடுத்து பல திருப்பங்களுடன் ரஜினி தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here