நடிகை சமந்தா நடிப்பில் வெளியான சாகுந்தலம் திரைப்படம் படுதோல்வியடைந்ததால் படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.

எதிர்பாப்பில் இருந்தது

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தற்போது இவரது நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் வெளிவந்துள்ளது. புராண கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில், சகுந்தலை என்ற கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். பல்வேறு காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு, சமீபத்தில் ஏப்ரல் 14ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியானது.

சொதப்பிய வசூல்

இயக்குநர் குணசேகரன் இயக்கத்தில், நடிகை சமந்தாவுக்கு ஜோடியாக தேவ் மோகன் இந்த படத்தில் நடித்திருந்தார். மேலும் அதிதி பாலன், அல்லு அர்ஹா உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் வெற்றிக்காக இந்த படக் குழுவினர் பல மாதங்களாக பிரமோஷனில் ஈடுபட்டு வந்தனர். ஆனால் எதிர்பார்த்த அளவு இந்த திரைப்படம் ரசிகர்களை கவரவில்லை என்றே சொல்ல வேண்டும். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆன சாகுந்தலம் திரைப்படம், முதல் நாள் ரூ.5 கோடி வரை வசூலித்தது, அதன்பிறகு படிப்படியாக வசூல் அதிகரிக்கும் என்று நினைத்திருந்த நிலையில், இரண்டாவது நாள் வசூல் ரூ.1.5 கோடி மட்டுமே வசூலித்துள்ளது. இதனால் பேரதிர்ச்சியில் பட குழுவினர் இருக்கின்றனர். கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் மட்டுமே நடித்து வரும் சமந்தா, சாகுந்தலம் திரைப்படத்திற்காக நீண்ட நாட்கள் காத்துக் கொண்டிருந்தார். ஆனால் இந்த படம் படுதோல்வி அடைந்ததனால் சமந்தா மட்டும் இல்லாமல், சமந்தாவின் ரசிகர்களும் வருத்தத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here