துபாயில் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டு உயிரிழந்த தமிழ்நாட்டை சேர்ந்த 2 பேரின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்து

துபாயில் அல்-ரஸ் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் நேற்று முன்தினம் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த பலர் சிக்கிக்கொண்டனர். விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். சில மணி நேர போராட்டத்திற்கு பின் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதுடன், கட்டிடத்தில் இருந்து பலர் மீட்கப்பட்டனர். இருப்பினும் தீ விபத்தில் சிக்கி அடுக்குமாடி குடியிருப்பில் இருந்த 16 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதில் 4 பேர் இந்தியர்கள் ஆவர்.

நிவாரணம்

அதேபோல் கேரளாவை சேர்ந்த தம்பதிகளும் பலியாகினர். தற்போது, தீ விபத்தில் இறந்த தமிழகத்தை சேர்ந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். உயிரிழந்தோரின் உடல்களை விரைந்து தமிழ்நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க அமைச்சர் மஸ்தானுக்கு முதல்வர் அறிவுறுத்தியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here