அம்பேத்கர் பிறந்தநாளில் அவரது சிலைக்கு மாலை அணிவிக்க நடிகர் விஜய் மக்கள் மன்ற நிர்வாகிகளுக்கு உத்தரவிட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அரசியல் ஆர்வம்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகரான விஜய், அரசியலில் ஈடுபடும் ஆர்வத்துடன் இருந்து வருகிறார். விஜய் மக்கள் நற்பணி இயக்கம் மூலமாக மக்களுக்கு பல உதவிகளை செய்து வரும் விஜய், முன்னதாக நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் தனது மக்கள் மன்ற நிர்வாகிகளை வேட்பாளர்களாய் நிறுத்தி சில தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார். ஒருபக்கம் தொடர்ந்து நடித்து வந்தாலும், மற்றொருபுறம் அரசியல் சார்ந்த நடவடிக்கைகளை நடிகர் விஜய் தீவிரப்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.

அரசியல் பரபரப்பு

இந்த நிலையில் நாளை அம்பேத்கர் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய சொல்லியிருக்கிறார் நடிகர் விஜய். இதை கண்காணிக்க 10 நிர்வாகிகளை அவர் நியமித்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்க விஜய் கூறியுள்ளது அரசியல் நகர்வுக்கான அறிகுறியாகவே கருதப்படுகிறது. இது அரசியல் வட்டாரத்திலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here