சின்னதம்பி திரைப்படம் வெளியாகி இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

32 ஆண்டுகள் நிறைவு

1991 ஆம் ஆண்டு ஏப்ரல் 12ஆம் தேதி பி. வாசு இயக்கத்தில், பிரபு, குஷ்பு நடிப்பில் வெளியான திரைப்படம் சின்னதம்பி. இந்த திரைப்படத்தில் மனோரமா, ராதா ரவி உள்ளிட்ட பலரும் துணை கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி உள்ளனர். சின்னதம்பி படத்தில் பிரபு மற்றும் குஷ்புவின் காம்போ இன்றும் ரசிகர்களுக்கு பிடித்த ஜோடி என்றே சொல்லலாம் அந்த அளவிற்கு அவர்களது நடிப்பு இன்றும் ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. எத்தனை ஹிட் படங்கள் குஷ்பு கொடுத்திருந்தாலும் குஷ்புவின் திரை வாழ்க்கையில் முக்கியமான திரைப்படமாக இந்த சின்னதம்பி திரைப்படம் அமைந்தது. மேலும் இந்த திரைப்படம் அப்பொழுதே வசூலில் சாதனையும் படைத்தது. கிட்டத்தட்ட 300 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடி சாதனையும் படைத்தது. தமிழில் வெற்றி பெற்ற இந்த திரைப்படம் தெலுங்கு மற்றும் ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியாகி 32 ஆண்டுகள் ஆனதை தொடர்ந்து நடிகை குஷ்பு ட்விட்டர் பக்கத்தில் தனது சந்தோசத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

சந்தோஷத்தில் குஷ்பு

குஷ்பு வெளியிட்டுள்ள பதிவில்,”சின்னதம்பி தமிழ் சினிமாவில் புயலை கிளப்பி 32 வருடங்கள் ஆகிறது என்பதை நம்பவே முடியவில்லை. என் மீது பொழிந்த அன்புக்கு என்றும் கடமைப்பட்டிருப்பேன். பி.வாசு & பிரபு ஆகியோருக்காக என் இதயம் எப்போதும் துடிக்கும். நந்தினி எப்போதுமே அனைவரின் இதயங்களிலும், மனங்களிலும் என்னென்றும் நிறைந்து இருப்பார்” என பதிவிட்டுள்ளார். இந்த சந்தோஷத்தை பகிரும் வகையில் ரசிகர்கள் இவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here