எதிர்நீச்சல் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கும் மதுமிதாவிற்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

சின்னத்திரையில் பிரபலம்

ஜீ தமிழில் ஒளிபரப்பான “பிரியாத வரம் வேண்டும்” தொடரின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர் நடிகை மதுமிதா. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் தொடர் மிகவும் பிரபலமானது. எதிர்நீச்சல் தொடரில் ஜனனி என்ற கதாபாத்திரம் மதுமிதாவை மிகவும் பிரபலமாக்கியது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த விருந்து வழங்கும் விழாவில் நடிகை மதுமிதாவிற்கு சிறந்த சின்னத்திரை நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது.

கவுரவிப்பு

சன் டிவியில் பல தொடர்கள் ஒளிபரப்பானாலும் எதிர்நீச்சல் தொடருக்கு என்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. ஹரிப்ரியா, கனிகா, மாரிமுத்து உள்ளிட்ட பலரும் நடித்து வரும் இந்த தொடரில், மதுமிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றதும், இவருடன் பணியாற்றும் சக நடிகர்கள் இவரை பாராட்டி வருகின்றனர். விருது வாங்கிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்த மதுமிதாவிற்கு, அவரது ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களையும், பாராட்டுகளையும் தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here