சென்னை வருவதையொட்டி பிரதமர் நரேந்திர மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் தமிழில் டுவீட் செய்துள்ளார்.

பலத்த பாதுகாப்பு

ரூ.2,467 கோடி மதிப்பீட்டில் உருவாகியிருக்கும் புதிய விமான நிலைய முனையம் உள்பட பல்வேறு திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் நரேந்திர மோடி இன்று சென்னை வருகிறார். அவரது வருகையையொட்டி 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தமிழில் டுவீட்

இந்த நிலையில், பிரதமர் மோடி தன்னுடைய டுவீட்டர் பக்கத்தில் தமிழக பயணம் தொடர்பாக தமிழில் பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது; “சென்னையில், விமான நிலையத்தின் புதிய முனையக் கட்டிடம் திறந்து வைக்கப்பட உள்ளது. தொடர்ந்து, சென்னை – கோயம்புத்தூர் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை துவக்கி வைத்து, பிறகு ஶ்ரீராமகிருஷ்ண மடத்தின் 125வது ஆண்டு நிறுவன விழாவிலும் கலந்து கொள்ள உள்ளேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here