சென்னை வரும் பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மோடி வருகை

பல்வேறு திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார். சென்னை விமான நிலையத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலைய முனையத்தை திறந்து வைக்கும் அவர், பின்னர் சென்னை – கோவை இடையே வந்தே பாரத் ரயிலை இயக்கும் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.

எதிர்ப்பு

இந்நிலையில், ராகுல் காந்தியின் எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காங்கிரஸ் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து Go Back Modi என்ற பதாகைகளை ஏந்தியபடி ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர். அதைதொடர்ந்து தியாகராய நகர் பெரியார் சிலைக்கு முன்பு மே 17 இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். சைதாப்பேட்டையில் தமிழக வாழ்வுரிமை கட்சி ஒருங்கிணைப்பாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வேல்முருகன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வாறு சென்னையில் பல்வேறு இடங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஏந்தியும், கருப்பு சட்டை அணிந்தும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here