நடிகர் பிரசாந்தின் இரண்டாவது திருமணம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார் அவரது தந்தை தியாகராஜன்.

டாப் நடிகர்

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வந்தவர் நடிகர் பிரசாந்த். அப்போது இவரது நடிப்பில் வெளியான பல திரைப்படங்கள் விஜய் மற்றும் அஜித் படங்களுக்கே டஃப் பைட் கொடுத்தது. அந்த அளவிற்கு மாஸ் ஹீரோவாக இருந்த டாப் ஸ்டார் பிரசாந்த், தனது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்தித்துள்ளார். அதன்பிறகு தனது நடிப்பிலும் கவனத்தை செலுத்த முடியாத நடிகர் பிரஷாந்த், பல தோல்வி படங்களையும் கொடுத்தார். ஆனால் தற்போது சுதாரித்துக்கொண்ட அவர் ஹிந்தியில் சூப்பர் ஹிட்டான அந்தாதுன் திரைப்படத்தின் ரீமேக்கான ‘அந்தகன்’ படத்தில் நடித்து வருகிறார். அந்தகன் படத்தை அவரது தந்தை தியாகராஜன் தயாரித்து, இயக்கியும் வருகிறார். இப்படத்தில் சிம்ரன், பிரியா ஆனந்த், சமுத்திரகனி, ஊர்வசி, வனிதா விஜயகுமார், கே.எஸ். ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.

முடிவுக்கு வந்த திருமண வாழ்க்கை

2005 ஆம் ஆண்டு பிரசாந்துக்கும் கிரகலட்சுமி என்பவருக்கும் திருமணம் கோலாகலமாக நடந்தது. இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. ஆனால் கிரகலட்சுமிக்கு ஏற்கனவே பதிவு திருமணம் நடந்திருப்பது குழந்தை பிறப்புக்கு பிறகு தான் தெரிய வந்தது. இதனால் மனமுடைந்த பிரசாந்த், கிரகலட்சுமியை விவாகரத்து செய்தார். அப்பொழுது இருந்த காலகட்டத்தில் டாப் நடிகராக இருந்த பிரசாந்தின் விவாகரத்து பெரும் சர்ச்சையாகவே பார்க்கப்பட்டது.

கொடுமையாக இருக்கிறது

இந்நிலையில் நடிகர் தியாகராஜனிடம் பிரசாந்தின் இரண்டாவது திருமணம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு அவர் அளித்துள்ல பதில்; “அந்தகன் திரைப்படத்தில் பிரசாந்த் மிகவும் கஷ்டப்பட்டு நடித்துள்ளார். இந்த படம் வெளியாகும் போது அவருடைய இரண்டாவது திருமணம் நடைபெறும். ஒரு வேலை பிரசாந்த் காதல் திருமணம் செய்திருந்தால் நன்றாக இருந்திருப்பாரோ என்று பலமுறை யோசித்துள்ளேன். தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் எண்ணற்ற துன்பங்களை அனுபவித்துவிட்டார். மகனை பிரிந்து வாழ்வது தான் மிகவும் கொடுமையாக இருக்கிறது” என்று தியாகராஜன் தனது மகன் பிரசாந்த் குறித்து மிகவும் உருக்கமாக பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here