பல ஏழை குழந்தைகளை படிக்க வைக்கும் KPY பாலாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை வழங்கியுள்ளார்.

பிரம்மாண்ட விழா

நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ருத்ரன்’. இந்த படத்தில் சரத்குமார், பிரியா பவானி சங்கர், பூர்ணிமா பாக்யராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இப்படத்தை, பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்கியுள்ளார். ‘ருத்ரன்’ திரைப்படம் வருகிற 14ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடந்தது. பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில், சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர்கள் வெற்றிமாறன் மற்றும் லோகேஷ் கனகராஜ் கலந்துகொண்டனர்.

உதவி செய்த லாரன்ஸ்

இந்த இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியின் தொகுப்பாளராக இருந்த பாலாவிற்கு நடிகர் ராகவா லாரன்ஸ் ரூ.10 லட்சத்திற்கான காசோலையை, அவரது தாயாரின் கையில் கொடுத்தார். பல ஏழை குழந்தைகளை படிக்க வைத்து வரும் பாலாவை ஊக்குவிக்கும் விதமாக ராகவா லாரன்ஸ் செய்த இந்த செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஏற்கனவே நடிகர் ராகவா லாரன்ஸ் அவரது தாயார் பெயரில் அறக்கட்டளை ஒன்று நடத்தி மாற்றுத்திறனாளிகளுக்கும், ஏழைகளுக்கும் உதவி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here