நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் பறவைகள் கூண்டில் அடைக்கப்பட்டிருப்பதை நடிகை ஸ்ரேயா கண்டித்துள்ளார்.

பறவைகள் அடைப்பு

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடியவர் நடிகை ஸ்ரேயா. சமீபத்தில் இவர் நடிப்பில் திரிஷ்யம் 2 மற்றும் கப்ஜா உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. திருமணத்திற்கு பிறகும் பல படங்களில் நடித்தும், கமிட் ஆகியும் வருகிறார். இந்நிலையில் தற்போது பைவ் ஸ்டார் ஹோட்டல் ஒன்றில் மிகப்பெரிய கூண்டில் பல வெளிநாட்டு பறவைகளை அடைத்து வைத்திருப்பது குறித்து வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார் நடிகை ஸ்ரேயா.

புகார் கொடுத்த ஸ்ரேயா

நடிகை ஸ்ரேயா வெளியிட்டுள்ள வீடியோவில் அவர் கூறியிருப்பதாவது, “நீங்கள் ஒரு பறவைகளின் காதலனாக இருந்தால் அவற்றை இப்படி ஒரு கூண்டில் அடைத்து வைக்கக்கூடாது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். பறவைகள் என்றாலே அவை சுதந்திரமானவை. இவ்வளவு நிறைய பறவைகள் எதற்காக ஒரு சிறிய கூட்டில் வைத்துள்ளீர்கள்?. உங்களுக்கு பொறுப்பே இல்லையா?. இதற்கு சட்டபூர்வமானது என்றாலும் சரிதானா? யாரும் சில பார்வையாளர்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக இவற்றை ஏன் இப்படி அடைத்து வைக்க வேண்டும். அடைத்து வைத்த பறவைகளை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது” என்று தனது வருத்தத்தையும், கண்டனத்தையும் தெரிவித்துள்ளார். ஸ்ரேயாவின் பதிவிற்கு சில பேர், இது வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட பறவைகள். இந்திய சூழலில் வெளியேவிட்டால் அவை உயிர் வாழ முடியாது என்று பதில் பதிவிட்டுள்ளனர். இதற்கும் விளக்கம் அளித்துள்ள ஸ்ரேயா, எதற்காக வெளிநாட்டிலிருந்து பறவைகள் இங்கே கொண்டு வர வேண்டும்? அதை ஏன் கூண்டில் அடைக்க வேண்டும்? பறவைகள் வர்த்தகத்தை முதலில் நிறுத்த வேண்டும் என்று பதில் கொடுத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here