சன் டிவியில் வானத்தைப்போல தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் இரண்டு பிரபலங்களுக்கு அடுத்தடுத்து விபத்து ஏற்பட்டதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

குடும்ப சீரியல்

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல தொடர் பல ரசிகர்களைக் கொண்டது. பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் வானத்தைப்போல தொடருக்கு பேமிலி ஆடியன்ஸ் அதிகம். இந்த தொடர் 2020 ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வருகிறது. அண்ணன் தங்கைகளின் பாசத்தை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டு வரும் இந்த தொடரில், சின்ராசு என்ற கதாபாத்திரத்தில் தமன் நடித்து வந்தார். மேலும் துளசி என்ற கதாபாத்திரத்தில் ஸ்வேதாவும் நடித்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்தாண்டு சீரியலை விட்டு விலகினர். தற்போது சின்ராசு கதாபாத்திரத்தில் நடிகர் ஸ்ரீ குமாரும், துளசி கதாபாத்திரத்தில் மான்யா ஆனந்த் என்பவரும் நடித்து வருகின்றனர். இத்தொடரில் நடித்து வரும் இரு பிரபலங்களுக்கு அடுத்தடுத்து விபத்துக்கள் நடந்துள்ளது. இந்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கார் விபத்து

வானத்தைப்போல தொடரில் சின்ராசுவின் மாமா முத்தையா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் மனோஜ் குமார். கடந்த 31ஆம் தேதி காலை காரில் மனைவி செல்வி மற்றும் உதவியாளர் ரகுபதியுடன் தேனிக்கு புறப்பட்டு உள்ளார். விழுப்புரம் அடுத்த விக்கிரவாண்டி என்ற இடத்தில் திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் மூன்று பேரும் பலத்த காயமடைந்துள்ளனர். தற்போது மூவரும் தீவிர சிகிச்சையில் உள்ளனர்.

தீ விபத்து

அதேபோல் இந்த தொடரில் ஹீரோவாக இருக்கக்கூடியவர் சின்ராசு எனும் ஸ்ரீகுமார். சமீபத்தில் சென்னை பாண்டி பஜாரில் வணிக வளாகத்தில் நடந்த திடீர் தீ விபத்தின் போது அவர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் வணிக வளாகத்திற்கு உள்ளே இருந்ததாக கூறுகின்றனர். அந்த விபத்தில் கிட்டத்தட்ட 70 நபர்களுக்கு மேல் சிக்கியுள்ளனர். ஆனால் எந்த ஒரு பெரிய விபத்தும் ஏற்படாமல் அனைவருமே பத்திரமாக மீட்கப்பட்டனர். இதில் நடிகர் ஸ்ரீகுமார் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு எந்த ஒரு காயமும் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது. ஒரே தொடரில் நடித்து வரும் இரு நடிகர்களுக்கும இப்படி விபத்து ஏற்பட்டு இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here