புஷ்பா படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியதற்கு நடிகை சமந்தா விளக்கம் கொடுத்துள்ளார்.

தீவிர ப்ரோமோஷன்

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வருபவர் நடிகை சமந்தா. தற்போது சாகுந்தலம் படத்தில் நடித்து முடித்துள்ளார். பல்வேறு காரணங்களால் இப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டு வந்தது. இந்நிலையில் ஏப்ரல் 14ஆம் தேதி இந்த திரைப்படம் வெளியாகும் என்று அறிவிப்பை இப்படக்குழு வெளியிட்டுள்ளது. சாகுந்தலம் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் நடிகை சமந்தா இதுதொடர்பான பல இன்டர்வியூக்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் கொடுத்துள்ள பேட்டியில், புஷ்பா படத்தில் “ஓ சொல்றியா மாமா” பாடலுக்கு நடனம் ஆடியது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு நடிகை சமந்தா தனது கருத்தை கூறியுள்ளார்.

சமந்தா விளக்கம்

இதுகுறித்து நடிகை சமந்தா கூறுகையில், “இது வரையில் நான் ஐட்டம் சாங் செய்ததில்லை. அதை நான் ஒரு வித்தியாசமான கதாபாத்திரமாகவே பார்த்தேன். எனக்கு புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள வேண்டும், எக்ஸ்ப்ளோர் செய்ய வேண்டும் என ஆசை. வெரைட்டியான கதாபத்திரங்களில் நடிக்க வேண்டும் என ஆசை. இந்த பாடலை நான் ஒரு கதாபாத்திரமாகவே நினைத்தேன். ஐட்டம் பாடலில் நான் நடிப்பதனால் நான் அப்படி நடந்துகொள்வேன் என்ற அர்த்தம் கிடையாது. எப்படி புதுப்புது ரோல்களில் நடிப்பேனோ அப்படி தான் அதை பார்த்தேன். இதுவரையில் நான் இதை ட்ரை செய்யவில்லை. அதனால் நான் செய்யப்போகிறேன். அப்படி தான் நான் அந்த பாடலையும் பார்த்தேன்” என்று கூறினார்.

பிடிக்காததால் விவாகரத்து

இந்த ஐட்டம் பாடலில் நடனமாட கமிட்டான பிறகுதான் நாக சைதன்யா சமந்தாவை விவாகரத்து செய்ய முடிவு செய்தார் என்றும், அவருக்கு சமந்தா ஐட்டம் சாங் ஆடுவது பிடிக்கவில்லை என்றும் பல தகவல்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது. சமீபகாலமாக நடிகை சமந்தா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவர் எடுத்த யசோதா திரைப்படம் நல்ல விமர்சனங்களை பெற்றது. அதேபோல் 14ஆம் தேதி ரிலீசாக இருக்கும் சாகுந்தலம் திரைப்படமும் மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here