ஆரஞ்சு உடையில் மெழுகு சிலை போல் தோன்றிய பாலிவுட் நடிகை கரீனா கபூரை ரசிகர்கள் புகழ்ந்து வருகின்றனர்.

வெற்றி நாயகி

2000 ஆம் ஆண்டு ‘refugee’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார் நடிகை கரீனா கபூர். சினிமா துறையில் வெற்றிகரமாக 23 ஆண்டுகளை கடந்துள்ள இவர், அஜினாபி, அசோகா, குஷி, சமேலி, தேவ், 36 சைனா டவுன், சுப் சுப் கே உள்ளிட்ட பல வெற்றி படங்களை கொடுத்தார். அன்று முதல் இன்று வரை பாலிவுட்டின் டாப் நடிகையின் லிஸ்டில் ஒருவராக இருந்து வருகிறார். தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ள நடிகை கரீனாவை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். தீவிர உடற்பயிற்சி, யோகா என்று அனைத்திலும் கவனம் செலுத்தி தனது உடலை காத்து வருகிறார் கரீனா. 2012 ஆம் ஆண்டு சாய்ஃப் அலி கானை காதலித்து திருமணம் செய்துகொண்ட கரீனாவுக்கு, தற்போது இரண்டு குழந்தைகள் உள்ளனர். குழந்தை பிறப்புக்கு பிறகும் அவர் தனது உடலை மெயின்டைன் செய்துவருகிறார்.

சமூக ஆர்வலர்

UNICEF-இன் புதிய முயற்சியான “Every child reading” திட்டத்தின் தூதராக கரீனா கபூர் நியமிக்கப்பட்டார். சமீபத்தில் பிஸி கோப்லெட் என்ற விளம்பரத்தில் ஈடுபட்ட கரீனா கபூர் அனைவரையும் கவர்ந்துள்ளார். ஆரஞ்சு உடையில் மெழுகு சிலை போல் தோன்றிய கரீனா கபூரை ரசிகர்கள் புகழ்ந்து பாராட்டி கமெண்ட் செய்து வருகின்றனர். கடந்தாண்டு லால் சிங் சத்தா என்ற படத்தில் நடித்திருந்த கரீனா கபூர், தற்போது இரண்டு ஹிந்தி படங்களில் நடித்து முடித்துள்ளார். அப்படங்களின் போஸ் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here