காதல் கதைகளில் நடிக்க அதிக ஆர்வம் உள்ளதாக நடிகை ராஷி கண்ணா கூறியுள்ளார்.

காதல் கதை

மெட்ராஸ் கஃபே என்ற ஹிந்தி படத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு சினிமா துறையில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. ஆரம்ப காலத்தில் அதிகமான தெலுங்கு படத்தில் நடித்து வந்தார். இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான ராஷி கண்ணா, அடங்கமறு, அயோக்கியா ,சங்கத்தமிழன், துக்ளக் தர்பார் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மற்றும் சர்தார் திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது பா.விஜய் படத்தில் நடித்திருக்கும் ராஷி கண்ணா, அடுத்தடுத்து காதல் படங்களில் நடிக்க ஆசைப்படுவதாக கூறியுள்ளார்.

காதலுக்கு பொருத்தமானவர்

சமீபத்தில் நடிகை ராஷி கண்ணா கொடுத்துள்ள பேட்டியில் கூறி இருப்பதாவது, “காதல் கதை அம்சம் உள்ள படங்களை ரசிகர்கள் விரும்பி பார்க்கிறார்கள். காதல் படங்கள் போர் அடிக்காது. எனக்கு வித்தியாசமான காதல் படங்களில் நடிக்க ஆர்வம் உள்ளது. பல இயக்குநர்கள் கதை கூறியுள்ளனர். ஆனால் அந்த கதைகள் கொஞ்சம் கூட வித்தியாசம் இல்லை. ஒரே மாதிரியாகவே இருக்கின்றது. பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆரியன் காதல் படங்களில் நடிக்க பொருத்தமானவர். அவருடன் சேர்ந்து நடிக்கவும் எனக்கு விருப்பம் உள்ளது” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here