பொது நிகழ்ச்சி ஒன்றில் தீபிகா படுகோன் தன் கணவர் ரன்வீர் சிங்கின் கையை பிடிக்க மறுத்ததால் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

காதல் திருமணம்

ஆறு வருடம் காதலித்து 2018 ஆம் ஆண்டு இத்தாலியில் கோலாகலமாக ரன்வீர் சிங் – தீபிகா படுகோன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் இருவரும் பிஸியாகவே இருந்து வருகின்றனர். மும்பையில் நேற்று இந்திய ஸ்போர்ட்ஸ் ஹானர்ஸ் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அந்த நிகழ்வில் சினிமா பிரபலங்களும், விளையாட்டு வீரர்களும் கலந்துகொண்டனர். அதில் ரன்வீர் சிங், தீபிகா படுகோன், தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

மறுத்த தீபிகா

இந்த விழாவிற்கு ஜோடியாக வந்த இருவரும் கருப்பு உடையில் அசத்தலாக வந்து இறங்கினர். சிவப்பு கம்பளத்தில் நடந்து வரும் சமயத்தில் தன் மனைவியிடம் கையை நீட்டினார் ரன்வீர் சிங். ஆனால் கையைப் பிடிக்க மறுத்தார் தீபிகா படுகோன். கையை நீட்டியதையே கண்டுக்காமல் தனியாகவே சிவப்பு கம்பளத்தில் நடந்து வந்தார். இந்த வீடியோவை பார்த்த நெடிசன்கள் இருவர்களுக்கும் என்ன ஆயிற்று? என்று கேள்வி கேட்டு வருகின்றனர். அது மட்டுமில்லாமல் தீபிகாவின் முகம் ஒரு வாட்டமாக இருப்பதாகவும் கமெண்ட் செய்து வருகின்றனர். ஏற்கனவே இருவர்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளதாகவும், விவாகரத்து செய்ய போவதாகவும் சில நாட்களாகவே தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் தற்போது வெளிவந்த இந்த வீடியோவும் எரியும் தீயில் எண்ணெயை ஊற்றியது போல இருக்கிறது. இருவருக்கும் என்ன பிரச்சனை உள்ளது என்பதை யாராவது ஒருவர் வாய் திறந்தால் மட்டுமே அனைவருக்கும் உண்மை தெரிய வரும். இது வதந்தியாகவே இருந்தால் நன்றாக இருக்கும் என்று இவர்களது ரசிகர்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here