தமிழும் சரஸ்வதியும் தொடரில் திடீர் திருப்பமாக கார்த்தி சேர்மேனாக நியமிக்கப்பட்டதால் கடும் கோபத்தில் இருக்கிறார் அர்ஜுன்.

சுற்றி வில்லத்தனம்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் தமிழும் சரஸ்வதியும் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஒற்றுமையாக இருக்கும் கோதையின் குடும்பத்தை பிரிக்க வேண்டும் என்று இரண்டாவது மருமகளான வசுவின் தாயார் சந்திரகலா பல திட்டங்களை போட்டு வருகிறார். இன்னொரு பக்கம் கோதையின் மாப்பிள்ளையான அர்ஜுனும் தற்போது அந்த வேலையை பார்க்கத் தொடங்குகிறார். கோதையின் நிறுவனத்தை இரண்டு மகன்கள் பார்த்து வந்த நிலையில், அர்ஜுன் சதி திட்டம் தீட்டி தமிழை வீட்டை விட்டு அனுப்பிவிடுகிறார். அதுமட்டும் இல்லாமல் நிறுவனத்தின் சேர்மேனாக வேண்டும் என்ற எண்ணத்தில் பல பிளான்களை செய்து ஏமாற்றி வருகிறார்.

மாப்பிப்ளைக்கு ஆப்பு

மாப்பிள்ளையை முழுவதுமாக நம்பும் கோதை, அவரை சேர்மேன் ஆக்க முடிவும் எடுக்கிறார். தமிழ் வீட்டை விட்டு சென்றுவிட்டதால் கண்டிப்பாக நாம் தான் சேர்மன் என்ற கர்வத்தில் சுற்றுத் திரியும் அர்ஜுனுக்கு ஆப்பு வைத்தது போல கோதை ஒரு முடிவை எடுத்துள்ளார். கடைசி நேரத்தில் தமிழும் சரஸ்வதியும் இணைந்து திட்டம் தீட்டி கார்த்திக்கை சேர்மேன்னாக்க பல பிளான்களை போட்டுவிட்டனர். கம்பெனியின் முன்னேற்றதற்கு வருங்கால திட்டத்தை பற்றி ஊழியர்களிடம் கூறுங்கள் என்று கோதை இருவரிடம் கூறிய நிலையில், கார்த்திக் பேசிய பல விஷயங்கள் ஊழியர்களுக்கு பிடித்துப் போக கைத்தட்டல்களையும் கோதையின் நம்பிக்கையும் வென்று விடுகிறார். அர்ஜுன் பேசும்போது ஊழியர்கள் கைதட்ட வேண்டும் என்பதற்காக பணம் கொடுத்து ஆல் செட்டப் செய்தும் அவரது திட்டம் பலிக்காமல் போனது. இறுதியாக கம்பெனி சேர்மேனாக கார்த்திக் நியமிக்கப்பட்டார். இவ்வாறு விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் இந்த எபிசோட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here