இரண்டாவது திருமணம் செய்துகொள்ள போவதாக வந்த தகவலுக்கு நடிகை மீனா விளக்கம் கொடுத்துள்ளார்.

சினிமாவில் 40 ஆண்டுகள்

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து மிகவும் பிரபலமானார். திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகளை கடந்த நடிகை மீனாவுக்கு சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக “மீனா 40” என்ற பெயரில் நிகழ்ச்சியும் கொண்டாடப்பட்டது. இதில் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து நாயகியாக நடிக்க துவங்கிய மீனா, ராஜ்கிரணுடன் என் ராசாவின் மனசிலே என்ற படத்தில் நடித்து தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார்.

உயிரிழந்த கணவர்

2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட மீனா திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஆண்டு நுரையீரல் பாதிக்கப்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது மகளுடன் தனியாக இருக்கும் மீனாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முயற்சி செய்து வருவதாகவும், அதனால் மாப்பிள்ளை தேடுவதாகவும் அடிக்கடி சமூக வலைதளத்தில் தகவல்கள் வெளியானது.

ஏற்றுக்கொள்ள முடியவில்லை

இந்நிலையில் இரண்டாவது திருமணம் குறித்து நடிகை மீனா வெளிப்படையாக பேசியுள்ளார். “என்னுடைய கணவர் இல்லை என்பதையே இன்னும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதற்குள் எப்படி இப்படிப்பட்ட செய்திகள் வெளியாகிறது என்பது என்னால் தற்போது வரை புரிந்துகொள்ள முடியவில்லை. தற்போதைக்கு நல்ல கதைகள் அமைந்தால் திரைப்படங்களி நடிப்பதில் கவனம் செலுத்துவேன். அதேபோல் எனது மகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து தருவதே எனக்கு மிகவும் முக்கியம்” என கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here