பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்து வந்த கன்னியாகுமரி பாதிரியார் பெனடின் ஆன்டோ தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிரியார்

கன்னியாகுமரி மாவட்டம் விளவங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பெனடிக்ட் ஆன்டோ. 29 வயதாகும் இவர் குமரி மாவட்டத்தில் உள்ள கிறிஸ்தவ மத வழிபாட்டு தலமான தேவாலயத்தில் பாதிரியாராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களாக பாதிரியார் பெனடிக்ட் ஆன்டோ பெண்களுடன் ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தின. தேவாலயத்திற்கு வரும் பெண்களுடன் பாதிரியார் ஆன்டோ ஆபாசமாக இருக்கும் வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது.

அதிரடி கைது

இதனிடையே, பாதிரியார் பெனடிக் ஆன்டோ பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் ஒருவர் குமரி மாவட்ட சைபர் கிரைம் போலீஸில் புகார் அளித்தார். இதனை அறிந்த பெனடிக் ஆன்டோ தலைமறைவானார். அவரை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், நாகர்கோவிலில் பண்ணை வீட்டில் தலைமறைவாக இருந்த பெனடிக் ஆன்டோவை தனிப்படை போலீசார் இன்று கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here