உடல் எடையை குறைத்ததற்கான காரணத்தை கூறியுள்ளார் நடிகை வரலக்ஷ்மி.

தெலுங்கில் ஹிட்

இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான “போடா போடி” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வரலக்ஷ்மி. அதன் பிறகு தாரை தப்பட்டை, சண்டைக்கோழி 2, சர்க்கார், மாரி 2, நீயா 2 போன்ற பல படங்களில் நடித்தார். சமீபத்தில் இவர் சமந்தாவுடன் இணைந்து நடித்த யசோதா திரைப்படம் மிகவும் பிரபலமானது. சமீபத்தில் திரையரங்குகளில் வெளியான மைக்கேல் திரைப்படத்திலும் வரலக்ஷ்மி நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரச்சனைகளை சந்தித்தேன்

தற்போது அடுத்தடுத்து பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் வரலக்ஷ்மி . இவர் நடிப்பில் பல படங்கள் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கின்றது. தமிழில் மட்டும் இல்லாமல் மலையாளம், கன்னடம், தெலுங்கு போன்ற பல மொழிகளிலும் நடித்து வருகிறார் வரலக்ஷ்மி. சமீபத்தில் அதிக அளவில் தனது உடல் எடையை குறைத்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார் நடிகை வரலட்சுமி, இது குறித்து அவரிடம் சமீபத்தில் ஒரு பேட்டியில் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு நடிகை வரலக்ஷ்மி கூறிய பதில் சமூகவலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது. அவர் கூறியிருப்பதாவது,”உடல் என்பது எனது உரிமை. ஒரு நடிகை இப்படித்தான் இருக்க வேண்டும் என எந்த அவசியமும் இல்லை. உடல் எடை அதிகமாக இருந்ததால் பல உடல் நல பிரச்சனைகளை சந்தித்தேன். நான் தெலுங்கில் அதிகம் நடித்து வருகிறேன். தெலுங்கு சினிமாவுக்கு என சில தேவைகள் இருக்கிறது, அதற்காகவும் உடல் எடையை குறைத்தேன். யார் என்ன சொன்னாலும் கேட்காதீர்கள் உங்களுக்காக நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை விரும்பிச் செய்யுங்கள் என கூறியுள்ளார் வரலக்ஷ்மி.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here