சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பஸ்சர் சுற்றில் வெற்றி பெறுபவர்களுக்கு பைக் பரிசாக காத்திருக்கிறது.

பைக் பரிசு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களுக்கு தனி ரசிகர்கள் உள்ளனர். அந்த வகையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது. இந்த நிகழ்ச்சியின் 8 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்த நிலையில், 9வது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. ஸ்டார் விஜய்யின் முக்கிய நிகழ்ச்சியாகவும் சூப்பர் சிங்கர் இருந்து வருகிறது. சில மாதங்களுக்கு முன்பு 20 போட்டியாளர்களுடன் துவங்கிய இந்த நிகழ்ச்சி, தற்போது 10 போட்டியாளர்களை கொண்டு உள்ளது. சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் இருக்கின்றது. கிராண்ட் ஃபினாலே நோக்கி நிகழ்ச்சி முன்னேறும் வேளையில் போட்டியாளர்களுக்கு புதுமையான சுற்றுகள் வைக்கப்படுகின்றன. அதிலும், வரும் வாரத்தில் ஒவ்வொரு போட்டியாளரும் சிறந்த பாடலை மிகச் சிறப்பாக பாட வேண்டும். அவ்வாறு அவர்கள் பாடினால் அவர்களுக்கு பைக் பரிசாக காத்திருக்கிறது.

பஸ்சர் ரவுண்டு

இந்த வார எபிசோட் கண்டிப்பாக விறுவிறுப்பாகவும், பரபரப்பாகவும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது மட்டும் இல்லாமல், இந்த எபிசோடில் சந்தோஷ நாராயணன், சாம் சிஎஸ், விஜய் யேசுதாஸ், ஹரிச்சரண், ஷ்கதி ஸ்ரீ கோபாலன், சத்ய பிரகாஷ் உள்ளிட்டோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். இந்த ஃப்ரீ ஸ்டைல் சுற்றுக்கு போட்டியாளர்கள் பாடும்போது நடுவர்கள் பஸ்சரை அழுத்தினால் அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்று பொருள். அவ்வாறு அவர்கள் குறைந்தது ஐந்து முறையாவது வெற்றி பெற வேண்டும். ஒரு போட்டியாளர் ஆறு பஸ்சர்கள் வெல்ல முடியும், அதிகபட்சமாக 60 பஸ்சர்கள் வெல்ல வாய்ப்பும் உள்ளது. அவர்கள் ஒவ்வொருவரும் மொத்தமாக 60க்கு 50 பஸ்சர்கள் வரை வென்றால் 10 போட்டியாளர்களுக்கும் தலா ஒரு பைக் பரிசாக கிடைக்கும். போட்டியில் இப்படி ஒரு பரிசு இருப்பதால் கண்டிப்பாக இந்த சுற்று விறுவிறுப்பாகவும், அவர்களுக்கு மத்தியில் கடும் போட்டியும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here