பிரபல பின்னணி பாடகி எல்.ஆர். ஈஸ்வரி புஷ்பா படத்தில் இடம்பெற்றுள்ள ஓ சொல்றியா மாமா பாடலை விமர்சனம் செய்துள்ளார்.

புஷ்பா பாடல்

சுகுமார் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். ரசிகர்களிடைய நல்ல வரவேற்பை பெற்ற இந்த படத்திடத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் ஆனது. அதில் ஓ சொல்றியா மாமா பாடல் பல சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. ஆனால் தமிழில் ஆண்ட்ரியா குரலில் இடம்பெற்ற அந்த பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. சமந்தாவின் கவர்ச்சி நடனமும், டிஎஸ்பியின் இசையும், ஆண்ட்ரியாவின் குரலும் அந்த பாடலுக்கு வேற லெவல் ஹிட் கொடுத்தது.

ஒரு மாதிரியா இருக்கு

இந்நிலையில் மூத்த பின்னணி பாடகியான எல்.ஆர். ஈஸ்வரி ஒ சொல்றியா மாமா பாடலை கடுமையாக விமர்சித்துள்ளார். இதுதொடர்பாக சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது; “புஷ்பா படத்தில் இடம்பெற்ற “ஓ சொல்றியா மாமா” பாடலை சமீபத்தில் கேட்டேன். அதெல்லாம் ஒரு பாடலா? தொடக்கத்தில் இருந்து கடைசி வரை ஏதோ ஒரு மாதிரியாகவே இருந்தது. இசையமைப்பாளர் இதையெல்லாம் நிச்சயம் கவனிக்க வேண்டும். பாடகர்களுக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. இசையமைப்பாளர் சொல்லும்படி அவர்கள் பாடவும் செய்து விடுவார்கள். அந்த பாடல் என்னிடம் வந்திருந்தால் அதற்குரிய கலரே வேறு மாதிரியாக இருந்திருக்கும். நாங்கள் மிகவும் சின்சியராக வேலை செய்தோம். அதனால் அப்போது நாங்கள் பாடிய பாடல்கள் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் நிலைத்து நிற்கிறது” என்று கூறியுள்ளார். 1950ல் பின்னணி பாடகியாக தனது வாழ்க்கையை தொடங்கிய எல்.ஆர் ஈஸ்வரி இன்றும் சினிமாவில் பாடி வருகிறார். அம்மன் பாடல்களுக்கு பேர் போன பாடகியான எல்.ஆர். ஈஸ்வரியின் குரல் ஒலிக்காத அம்மன் கோயில்களே இல்லை என்று சொல்லலாம். இவரது குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here