பணம் கையில் வந்தால் தான் நிஜம் அதற்கு முன் கனவு காணாதீர்கள் என இயக்குநர் செல்வராகவன் தனது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.

பன்முக திறமையாளர்

துள்ளுவதோ இளமை திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான செல்வராகவன், தற்போது நடிகராகவும் கலக்கி வருகிறார். இவர் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன உள்ளிட்ட படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. சமீபத்தில் இவரது இயக்கத்தில் வெளியான நானே வருவேன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

அனுபவம்

விஜய் நடித்த பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமானார் செல்வராகவன். அதன்பிறகு சாணிக் காகிதம் படத்தில் கீர்த்தி சுரேஷ் உடன் இணைந்து பழிவாங்கும் கதையில் வெறித்தனமாக நடித்திருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான பகாசுரன் திரைப்படமும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. வித்தியாசமான கதைகளை இயக்குவதுடன், வித்தியாசமான படங்களில் மட்டுமே நடித்து வருகிறார் செல்வராகவன். முக்கியமான சமயங்களில் மட்டும் டுவிட்டர் பக்கம் எட்டிப் பார்க்கும் அவர், தற்போது ரசிகர்களுக்கு அட்வைஸ் கொடுத்து தனது அனுபவத்தை பகிர்ந்து உள்ளார். அவரது பதிவில், “பணம் கையில் வந்தால் தான் நிஜம், அதுவரை கனவு காணாதீர்கள். செலவுகளை திட்டமிட வேண்டாம். அனுபவம்.. தத்துவம் அல்ல” என்று குறிப்பிட்டுள்ளார் செல்வராகவன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here