நெபாட்டிசம் தொடர்பாக தன்னை நடிகர் ராம்சரணுடன் ஒப்பிட்டு பேசிய நடிகர் நானி தற்போது சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

டாப் நடிகர்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருப்பவர்கள் நானி மற்றும் ராம்சரண். 2008 ஆம் ஆண்டு வெளியான அஷ்ட சம்மா என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார் நானி. அடுத்தடுத்து பல படங்கள் ஹிட் கொடுத்து ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகிய ஈகா என்னும் திரைப்படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அந்த திரைப்படம் “நான் ஈ” என்ற பெயரில் தமிழிலும் ரிலீசானது. அதன்பிறகு தமிழிலும் இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே உருவாகிவிட்டது.

கோபத்தில் ரசிகர்கள்

தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய ராம்சரனுடன், நானி தன்னை ஒப்பிட்டு பேசி இருப்பது ரசிகர்களை கடும் கோபத்திற்கு ஆளாகியுள்ளது. நடிகர் நானி மற்றும் ராணா டகுபதியும் தெலுங்கில் ஒளிபரப்பாகும் நிஜம் வித் ஸ்மிதா எனும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். அப்போது நானியிடம் சிலர் வாரிசு விவகாரம் (Nepotism) குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு பதில் அளித்த நானி, தன்னையும் ராம் சரணையும் ஒப்பிட்டு கூறியுள்ளார். அதாவது “இந்த விஷயத்தில் நான் என்னை நடிகர் ராம்சரனுடன் ஒப்பிட்டு பார்க்கிறேன். நான் நடித்த முதல் திரைப்படத்தை ஒரு லட்சம் பேர் மட்டுமே பார்த்துள்ளனர். ஆனால் ராம் சரணின் முதல் படத்தை கோடிக்கணக்கான பேர் பார்த்துள்ளனர்” என்று கூறியுள்ளார். வாரிசு நடிகர்கள் பற்றி நானி தன்னை ராம்சரணுடன் ஒப்பிட்டு பேசியிருப்பது ராம்சரணின் ரசிகர்களிடையே கடும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here