விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் 2 தொடர் முடிவுக்கு வந்துள்ளது.

நல்ல வரவேற்பு

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மௌன ராகம் சீசன் 2 தொடர் முடிவடையை போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. விஜய் டிவியில் பிரபலமான சீரியல் ஒன்றாக இருக்கக்கூடிய மௌன ராகம் சீசன் 2 தொடர் முடிவடையும் தருவாயில் உள்ளது. இந்த தொடர் சீசன் 1 மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. மௌன ராகம் 1 தொடர் 2017 ஆம் ஆண்டு முதல் ஒளிபரப்பாகி வந்தது. கொரோனா ஆரம்ப காலத்தில் முடிக்கப்பட்டது.

முடியும் நிலை

2021 ஆம் ஆண்டு முதல் புத்தம் புதிய கதை களத்துடன் தொடங்கப்பட்டது மௌன ராகம் சீசன் 2. இந்த தொடரில் ரவீனா தாஹா, ராஜீவ் பரமேஸ்வர் (கார்த்திக் கிருஷ்ணா), சிப்பி ரஞ்சித் (மல்லிகா), ஷில்பா(ஸ்ருதி) உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்த தொடரும் தற்போது முடியும் தருவாயில் உள்ளது. வில்லியான ஸ்ருதி குறித்த உண்மை அனைத்தும் குடும்பத்தினருக்கு தெரிந்துவிடுகிறது. அதனால் சீரியல் விரைவில் நிறைவுபெறுகிறது. இந்த தொடர் ஒளிபரப்பான அதே நேரத்தில் “பொன்னி”என்ற புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. இதற்கான ப்ரோமோ வீடியோவை சமீபத்தில் அதிகாரப்பூர்வமாக விஜய் டிவி வெளியிடப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here