நடிகர் கவினை காதலித்து வந்த லாஸ்லியா அவரை விட்டு பிரிந்த காரணத்தை முதன்முதலாக மனம் திறந்து கூறியுள்ளார்.

காதல் முறிவு

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து வந்தவர் லாஸ்லியா. அதன்பிறகு பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துகொண்டு, தமிழ் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவினுடன் நெருக்கமாக பழகி இருவரும் காதலித்து வந்தனர். ஆனால் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்தவுடன் இருவரும் பிரிந்து, அவரவர் வேலையை செய்ய தொடங்கி விட்டனர். ஃப்ரெண்ட்ஷிப் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார் லாஸ்லியா. இந்த படத்தில் ஹர்பஜன் சிங் ஹீரோவாக ,அறிமுகமானார் அவருடன் இணைந்து அர்ஜுன் நடித்ததும் குறிப்பிடத்தக்கது.

இவர் தான் காரணம்

பிக்பாஸ்க்கு பிறகு நடிகர் கவின் லிஃப்ட் என்ற படத்தில் நடித்தார். 2021 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது. அதன்பிறகு தற்போது டாடா என்ற படத்தில் நடித்துள்ளார். கவின் நடிப்பில் இந்த படமும் மிகப்பெரிய ஹிட் ஆனது. இந்த படத்தின் வெற்றியின் காரணமாக கமல் ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் கவின் புது படத்தில் கமிட் ஆகி இருப்பதாகவும் தகவல் வெளிவந்துள்ளது. இப்படி அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி பிஸியாக இருக்கிறார் கவின்.

கடும் எதிர்ப்பு

ஆனால், கவின் மற்றும் லாஸ்லியா இருவரும் ஏன் பிரிந்தார்கள் என்ற தகவல் இதுவரை வெளிவராமல் இருந்தது. தற்போது இதைபற்றி மனம் திறந்து பேசி உள்ளார் லாஸ்லியா. அதாவது, லாஸ்லியா காதலுக்கு அவர் அப்பா எதிர்ப்பு தெரிவித்ததால் இருவரும் பிரிந்ததாக கூறியுள்ளார். காதல் பிரிவுக்கு காரணம் தெரியாமல் இருந்த ரசிகர்களுக்கு தற்போது காரணத்தை தெரிவித்துள்ளார் நடிகை லாஸ்லியா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here