ராஜா ராணி 2 தொடரில் இருந்து நான் விலகியதற்கு பலரும் பல காரணங்கள் கூறுகின்றனர். அவை எல்லாமே வதந்தி தான் என்று ரியா விஸ்வநாதன் கூறியுள்ளார்.

மாற்றப்படும் கதாபாத்திரம்

விஜய் டிவியில் பிரபலமான தொடர்களில் ராஜா ராணி தொடரும் ஒன்று. ராஜா ராணி தொடரின் சீசன் 1 முடிந்து, தற்போது சீசன் 2 ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கின்றது. இந்த தொடரில் ஆரம்பத்தில் சந்தியா என்ற முதன்மை கதாபாத்திரத்தில் ஆலியா மானசா நடித்துக் கொண்டிருந்தார். ஆலியா கர்ப்பமாக இருந்த சமயத்தில் அந்த சீரியலை விட்டு வெளியே வந்த பிறகு ரியா விஸ்வநாதன் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். கிட்டத்தட்ட ஒரு வருடமாக ரியா தான் சந்தியா கதாபாத்திரத்தில் நடித்து வந்தார். ஆனால் திடீரென இந்த சீரியலை விட்டு சமீபத்தில் விலகினார் நடிகை ரியா.

எல்லாமே வதந்தி

ராஜா ராணி 2 தொடரில் தற்போது நடிகை ஆஷா கவுடா சந்தியாவாக நடித்து வருகிறார். இந்நிலையில் ரியா ஏன் பிரபலமான இந்த தொடரை விட்டு வெளியேறினார் என்று பலரும் பல கருத்துக்களை கூறி வந்தனர். விஜய் டிவிக்கும் ரியாவுக்கும் பிரச்சனை நடந்ததாகவும், அதனால் அவர் அந்த தொடரை விட்டு விலகி விட்டதாகவும் சிலர் கூறுகின்றனர். அது மட்டும் இல்லாமல் அவர் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும், அதனால் தான் இந்த தொடரை விட்டு விலகியதாகவும் பலர் கூறி வருகின்றனர். ஆனால் இவை அனைத்துக்கும் பதில் அளிக்கும் விதமாக நடிகை ரியா கூறுகையில், “நானாகத்தான் இந்த தொடரை விட்டு வெளியேறினேன். எனக்கு பலரும் திருமணம் என்றும் அதனால் தான் இந்த தொடரை விட்டு வெளியேறி விட்டேன் என்று பலரும் கூறுகின்றனர். ஆனால் அது உண்மை கிடையாது, இன்னும் எனக்கு திருமணம் ஆக இரண்டு மூன்று வருடங்கள் ஆகும் என்று கூறியுள்ளார். இவை அனைத்தும் என்னை பற்றி வரும் வதந்தி தான் என்று கூறியுள்ளார் . ஆனால் , எதனால் பிரபலாமான தொடரை விட்டு வெளியேறினார் என்ற தகவலை ரியா குறிப்பிடவில்லை. எத்தன சந்தியாவை தான் மாத்துவீங்க என்று ரசிகர்கள் கமெண்டுகள் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here