அதிக ஆன்மீக பயணம் மேற்கொள்ளும் நடிகை அமலா பால் இனி நடிப்பாரா, மாட்டாரா என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

பல முயற்சிகள்

தமிழில் சிந்து சமவெளி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை அமலாபால், இந்த படத்தினால் பல சர்ச்சைகளை சந்தித்தார். அதன் பிறகு பிரபு சாலமன் இயக்கத்தில் விதார்த்துடன் நடித்த மைனா திரைப்படம் அவருக்கு சூப்பர் ஹிட் படமாக அமைந்தது. தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற மொழிகளில் பிஸியாக இருந்த அமலாபால் தலைவா, தெய்வத்திருமகள், வேட்டை, நிமிர்ந்து நில், வேலையில்லா பட்டதாரி என்று இவரது பல படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட்டும் பெற்றது. ஆடை என்ற படத்தில் நிர்வாணமாக நடித்து பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். இயக்குநர் ஏ எல் விஜய்யை காதலித்து திருமணம் செய்த இவர், கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து செய்தார். அதன் பிறகு இவருக்கு தமிழில் சரியான மார்க்கெட் அமையாததால் இவரே சில படங்களை தயாரித்து நடித்து வந்தார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கடாவர் திரைப்படம் வித்தியாசமான படமாக இருந்தது.

ஆன்மீக பயணம்

சமூக வலைதளங்களில் அடிக்கடி தனது புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை அமலா பால் தற்போது கோவில் கோவிலாக சென்று வரும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். சில நாட்களுக்கு முன்பு பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்த மறுநாளே சென்று வழிபாடு செய்தார். தற்போது இந்தோனேஷியாவில் பாலி தீவில் உள்ள ஆசிரமத்திற்கு சென்றுள்ளார். அந்த ஆசிரமத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது ட்ரெண்டாகி வருகின்றன. கோவில் கோவிலாக சென்று ஆன்மீகத்தில் அதிக கவனம் செலுத்தி வரும் நடிகை அமலாபால், தற்போது சினிமாவை விட்டு விலக முடிவு செய்து விட்டாரா? என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here