“காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்ததல்ல” என நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவு அனைவரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

காதல் திருமணம்

தமிழில் வாலி படத்தின் மூலம் அறிமுகமான நடிகை ஜோதிகா, பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, ரிதம், குஷி, உயிரிலே கலந்தது, தெனாலி என்று தொடர்ந்து பல ஹிட் படங்களை கொடுத்தார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்து வரும் ஜோதிகா, நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதாபாத்திரத்தில் மட்டுமே அதிகமாக நடித்து வருகிறார். அந்த வகையில், 36 வயதினிலே, மகளிர் மட்டும், நாச்சியார், ராட்சசி, பொன்மகள் வந்தாள் போன்ற படங்களில் அவர் நடித்தார். சமீபத்தில் சோஷியல் மீடியாவில் இணைந்த ஜோதிகா, முக்கியமான சமயங்களில் மட்டுமே போஸ்ட்களை போட்டு வருகிறார்.

கருத்து கூறும் ஜோ

இந்நிலையில், இயக்குநர் ஜெயப்பிரகாஷ் ராதாகிருஷ்ணன் இயக்கிய காதல் என்பது பொதுவுடைமை படத்தின் போஸ்டரை பதிவிட்டு, “காதல் என்பது இரண்டு பாலினம் சார்ந்ததல்ல, அது இரண்டு இதயம் சார்ந்தது, காதலையும் அன்பையும் மட்டுமே மதித்து காதலர் தினத்தை கொண்டாடுவோம் என குறிப்பிட்டு உள்ளார் நடிகை ஜோதிகா. காதல் என்பது பொதுவுடைமை படத்தில் ஜெய் பீம் படத்தில் நடித்த லிஜோமோல், ரோகினி, வினித், அனுஷா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here