பழனி முருகன் கோவிலுக்கு நடிகை சமந்தா சென்ற புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

முக்கியத்துவம்

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம் பலரின் கவனத்தை பெற்றது. தற்போது இவரது நடிப்பில் வெளிவர இருக்கும் சாகுந்தலம் திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த சாகுந்தலம் திரைப்படம், ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருக்கிறது.

ஃபிட்னெஸ்

கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாத நடிகை சமந்தா, பல சிகிச்சை பெற்றதையடுத்து தற்போது உடல்நிலை தேறி வருகின்றார். மெல்ல மெல்ல உடல்நிலை தேறி வரும் இவர், உடற்பயிற்சி செய்து உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் தனது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்.

நிறைவேறிய வேண்டுதல்

கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்ட சமந்தா பழனி, முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். 600 படிக்கட்டுகளிலும் கற்பூரம் ஏற்றி நடந்து சென்று வேண்டுதலை நிறைவேற்றியுள்ளார் நடிகை சமந்தா. இந்த வேண்டுதலின்போது 96 பட இயக்குநர் பிரேம்குமார் மற்றும் சமந்தாவின் நெருங்கிய நண்பர்கள் உடன் இருந்தனர். இதுகுறித்து சமந்தா கூறுகையில், “உடல் நலம் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தேன், தற்போது கடவுளின் அருள் மற்றும் மருத்துவர்கள் ஆலோசனையால் உடல் நலம் தேறி வருகிறேன். உடல் நலம் பெற வேண்டுதல்களை நிறைவேற்ற பழனி முருகன் கோவிலுக்கு வழிபாடு செய்ய வந்துள்ளேன்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here